Followers

Tuesday 20 September 2016

              குற்றம் சாட்டப்பட்ட 269 பேருமே குற்றவாளிகள் என்றும் , இறந்துபோன 54 பேர் தவிர உயிரோடுள்ள 215 பேருக்கும் தண்டனை மற்றும் அபராதம் வழங்கி தீர்ப்பளித்தார் 2011 செப்டம்பர் 29 அன்று தருமபுரி மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.எஸ். குமரகுரு அவர்கள்.அதில் 4 ஐ.எப்.ஸ் அதிகாரிகள், 84 பேர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், 5 பேர் வருவாய்த்துறை. எதற்கு இந்த தண்டனை என்று யோசிக்கிறீர்களா????


தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் வாச்சாத்தி. 1992 வரை இந்த கிராமம் இருப்பதையே யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இப்போது கிராமத்தின் மக்கள் தொகை சுமாராக 800 பேருக்குள் இருக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பே இவர்களின் முக்கிய பிரதானத் தொழில்.விவசாய நிலம், வனப் பொருட்களை சேகரித்தல் இவர்களின் மற்றொரு வாழ்வாதாரம். வறட்டாறு என்று சொல்லக் கூடிய ஓடையும், ஏரியும், பாசனித்திற்கான கிணறுகளும் மொத்தத்தில் இயற்கையோடு இயைந்து வாழும் பக்கியசாலிகள்.

1992 ஜூன் 20 ம் தேதி வாச்சாத்தி மக்களின் மிகக் கொடுமையான நாள். அரசின் அடக்குமுறை சாதனங்களான வனத்துறை, வருவாய்த்துறை, காவல்த்துறையச் சேர்ந்த சுமார்300 பேர், துப்பாக்கி, தடியுடன் வாச்சாட்த்தி கிராமத்தின் மீது படையெடுத்தனர். கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் தப்பிவிட பெண்களும், முதியவர்களும் சிக்கி சின்னா பின்னமாயினர்.

ஊரிலுருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் அடித்து இழுத்துச் சென்று 200 பேருக்கும் மேலானோரை சிறையில் தள்ளினர். கர்ப்பிணிகளும், கைக்குழந்தைகலும் அதில் அடங்குவர். குடி தண்னீர் கிணற்றில் எஞ்சின் ஆயிலையும், ஆட்டு தோலையும் போட்டனர். அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பை துண்டித்தனர். தானிய மூட்டைகளை கொழுத்தினர், பீரோ மற்றும் பணப் பட்டிகளை உடைத்தனர். ஆடு மாடுகளை காணவில்லை. கேட்டால் வனத்துறையினர் பிரியாணி செய்து  சாப்பிட்டு விட்டதாகவும், மீதியை சந்தையில் விற்று விட்டதாகவும் சொல்கிறார்கள்.ஆரூரிலிருந்து வாச்சாத்திக்கு வந்துக் கொண்டிருந்த ஒரே பேருந்தும் நிறுத்தப்பட்டது.

ஆரூர் வனத்துறை அலுவலகத்தில் வைத்து பிடித்து சென்ற ஊர் மக்கள் அனைவரையும் கடுமையாகத் தாக்கி, ஊர்க் கவுண்டர் பெருமாள் என்பவரி அரை நிர்வாணப் படுத்தியதி, பெண்களின் துணிகளை அவிழ்க்குமாறு கட்டாயப் படுத்தி உள்ளனர். பெண்களை விட்டு பெருமாளின் உள்ளாடையை கழற்றச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.பெண்கள் மறுக்கவே ஊர்க் கவுண்டரை விளக்கு மாற்றால் அடிக்கச் சொல்லியுள்ளனர். மறுக்கவே அவர்களே அடித்துக் காட்டியுள்ளனர். 

ஜூன் 21ம் தேதி காலை புழு, பூச்சிகளுடன் கூடிய கஞ்சியை பாசிப்பிடித்த ஈய டம்ளரில் கொடுத்து குடிக்கச் சொல்லி துன்பப்படுத்துயுள்ளனர்.









No comments:

Post a Comment