Followers

Wednesday 6 November 2013

காதல் ஒரு முறைதான் வருமா..............?




 




















                   ஆம், காதல் ஒரு முறைதான் வரும். ஒரே ஒரு முறைதான் காதலிக்க முடியும், ஆனால் அந்த காதலுக்கான தேடல்களையும் சேர்த்து நாம் காதல் எனக் கொள்கிறோம். அதனால் தான் காதலில் தோற்றுப் போனதாய் தாடியை மட்டும் வளர்க்கிறோம். கருத்து ஒத்து போவதையெல்லாம் காதல் எனக் கொண்டால் அங்கே காதல் நேசிக்கப் படுவதில்லை கருத்துக்கள் மட்டுமே. காதல் நம்முடைய கருத்துக்களுக்கு ஒத்து போவதால் வருவதல்ல. கருத்து என்பது எப்பொழுதும் நிலைத்த தன்மையை உடையதாய் இருப்பதில்லை. கருத்து என்பது உன் கையில் கொடுக்கப்பட்ட ஒரு புத்தகம். அது படித்து முடிக்கும் வரைதான் அதன் தன்மை உன்னோடு வாசம் செய்யும். அடுத்த புத்தகத்தை நீ தொடங்கும் பொழுது நீ அதன் அடிமையாகிறாய்.