Followers

Wednesday 9 October 2013

உலகின் மிகச்சிறந்த பூ

            
                      ”அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது”.... மார்க்ஸ் திருமணமாகி 13 வருடங்கள் கழித்து ஜென்னிக்கு எழுதும் கடிதத்தில் இப்படி எழுதுகிறார்.... மார்க்ஸ்-ம் ஜென்னியும் ஒருவரை ஒருவர் நேசித்தனர், அதை விட ஒருவரை ஒருவர் உயர்வாக மதித்தனர்.  
"உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக"… 
இவ்வளவு அழகான கவிதை ஒரு பூவிற்கு எழுதியதுதான்... ஆம்! ஜென்னி என்ற மலருக்குத்தான் மார்க்ஸ் எழுதியது...