Followers

Friday 23 January 2015







உணவு உட்கொள்ளும் போது அதிகமாக ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் தேவையான ஆற்றலை உடல் எடுத்துக் கொள்ள முடியாது.  அதனால் ஜீரணக் கோளாறும் ஏற்படலாம். எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் நன்றாக மென்று விழுங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. ஜூஸ் சாப்பிடுவதை விட இது ஆரோக்கியமானதும் கூட. சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் பழங்களும் காய்கறிகளும் உடலுக்கு நல்லது. கேரட் முடிந்தவரையில் தினமும் ஒன்று சாப்பிடலாம். பிரிட்ஜில் வைத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கீரைகளை கொஞ்சம் கொஞ்சம் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment